ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வோசிங்டனின் உள்ள தேசியக் கட்டத்தொகுதிப் பகுதியில் அமைக்கப்பட்ட அந்த அருங்காட்சியத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்றுத் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா மற்றும் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் கலந்கொண்டிருந்தனர்.
அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட இரும்பு வேலைப்பாடுகளின் அடிப்படையிலான வெண்கல நிறமுள்ள பின்னல் வடிவ வேலைப்பாடுகளைக் கொண்டதாக அருங்காட்சியகத்தின் கட்டிடத்தினை சுற்றிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும், இந்த நாட்டிற்கு முதலில் அடிமைகளாக வந்த மக்களுக்கும் உள்ள சிக்கலான உறவை விபரிக்கும் இடமாக அந்த கருங்காட்சியகம் விளங்குகின்றது.
சிவில் உரிமைகள் இயக்கத்தை தூண்டிய எம்மிட் டில் என்ற கொலைசெய்யப்பட்ட ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவனின் சவப்பெட்டி உட்பட கிட்டத்தட்ட 3,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.