அனைத்துலக நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணைகளை நட,த்தினால் அரசியலில் இருந்து விலகுவேன் என்று பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் ஊடாக சமஸ்டி முறைமை ஏற்படுத்தப்பட்டாலோ அல்லது அனைத்துலக நீதிவான்கள் தருவிக்கப்பட்டாலோ தான் அரசியலிலிருந்து விலகிக்கொள்வேன் எனவும், இது தொடர்பில் தன்னார் உறுதியளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் என யாரேனும் கூறினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நீதிவான்கள் நாட்டுக்குள் வருவார்கள் என்றும், அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றம் உருவாக்கப்படும் எனவும், அரசியல் அமைப்பு சமஸ்டியாக்கப்படும் என்றும் கூட்டு எதிர்க்கட்சி நாட்டுக்குள் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.