• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Thursday, July 10, 2025
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

dineshpress by dineshpress
October 3, 2016
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கே அரசு முயற்சிப்பதாகவும், கொக்கிளாயில் தனியார் காணியில் பௌத்த விஹாரை அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள குடியேற்றங்கள் ஊடாக வடக்கில் 30 வீதம் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவும், இதற்காகவே சிங்கள அரசாங்க அதிபர்கள் வடபகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.

இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் உள்ள நிலையில், இவர்களில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் எனவும், இவர்கள் வடபகுதி எங்கும் பௌத்த விஹாரைகளை அமைத்து வருகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

இந்த நிலையில் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை வந்தாலேயே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும், அத்துடன் வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தியும் அடைவார்கள் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை கூறும்போது ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும், சுதந்திர கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும், தீவிரவாத போக்குடைய சிங்களவர்களும் வடக்கு மக்கள் இனவாதமாக செயற்படுவதாக கூறுவதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமஷ்டியை கோருவதில் எங்கு இனவாதம் உள்ளது என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தென் பகுதியில் எழுந்துள்ள இனவாதத்தையும், கூச்சல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுவரையில் தீர்த்து வைக்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் உரிமைகள் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ´எழுக தமிழ்´ பேரணி நடத்தப்பட்டதாகவும், அதனை இனவாதமாகத் திரித்துக் கூறி தெற்கில் இனவாதம் தலைதூக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தமிழருக்கு எதிராக இனவாதக் கருத்துக்களைக் கூறி வருவதைக் கண்டிக்காமல், சனாதிபதியும், பிரதமரும் மௌனம் காத்திருப்பதாகவும், இந்த நிலைமை தொடருமானால் புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களோ, எழுக தமிழ் நிகழ்வோ, இனவாத கருத்துக்களையோ, மதவாத கருத்துக்களையோ முன்வைக்கவில்லை என்றும், தனியார் காணிகளிலும், இந்து ஆலய காணிகளிலும், அதே நேரம் சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் அமைக்கப்படும் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

இதனை இனவாதமாகச் சித்தரித்து தெற்கில் எழுந்துள்ள இனவாதப் போக்கையும் கூச்சல்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வென்று அரசாங்கம் கூறிவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டும் எனவும், அந்தப் பேச்சுவார்த்தை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் நடைபெறவேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிய போதிலும், அதுவும் நடைபெறவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல – இரா சம்பந்தன்

Next Post

இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்க முன்வரவேண்டும்

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்க முன்வரவேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In