இலங்கை அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறறப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இந்த வாக்கெடுப்பில் , திட்டத்திற்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகளால் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, சிறிபால கம்லத், பிரேமலால் ஜயசேகர, உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது அவைக்கு சமூகமளித்திருக்கவில்லை.