தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை யாழ் பொது நூலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலையிலும் யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் முன்பாக வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அதன் போது நூலக முன்றலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்ட செய்தியினை கேள்வியுற்று மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் பற்றாளர் வண.பிதா தாவீது அடிகள் மற்றும் நூலக நிறுவுனர் செல்லப்பா ஆகியோரின் உருவப்படங்களுக்கும் மலர் தூபி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த ்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சிவஞானம் எதிர்க்கட்சி உறுப்பினரான தவராசா , ஆளும் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், கஜதீபன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.