ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் உள்ள இரவு நேர விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேக்ஸ்-ஸ்ட்ரோமேயர்-ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள க்ரெ விடுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.