நெல்லை மாவட்டத்தில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை சேர்ந்த சண்முகராஜ் இவரை மர்ம நபர்கள் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படுகொலை தொடர்பாக நெல்லை மாவட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





