• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Monday, March 16, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இந்தியா

நீட் எதிர்ப்பு: அமைதியான முறையில் போராடலாம்; தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம்!

dineshpress by dineshpress
September 8, 2017
in இந்தியா, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தது. இதனடிப்படையில், சென்னையில் போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், “மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை இல்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து அரசியல் கட்சிகள், தனி நபர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஆர்ப்பாட்டம், போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படுத்துவது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்து, வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனடிப்படையில், சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்தது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்தது.

அதுபோல், திமுக தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற அனுமதி வழங்கிய காவல்துறை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”உச்ச நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு தடை போடவில்லை. அதனால் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்றார். திட்டமிட்டபடி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்கவும் உரிய சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடத்தினர்.

இதனிடையே இணையத்தில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை இல்லை என்று நீதிபதிகள் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை இல்லை. கடையடைப்பு அல்லது போராட்டம் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் போராடலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம். அமைதி வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சட்டவிரோத குடியேறிகளுக்கான சலுகைகளை ரத்து செய்தமைக்கு எதிராக வழக்கு!

Next Post

இர்மா சூறாவளி: கியூபாவை தாக்குகிறது; அமெரிக்காவை நெருங்குகிறது

Related Posts

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி
இந்தியா

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
நட்சத்திர விழா 2025
எம்மவர் நிகழ்வுகள்

நட்சத்திர விழா 2025

June 22, 2025
Next Post

இர்மா சூறாவளி: கியூபாவை தாக்குகிறது; அமெரிக்காவை நெருங்குகிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In