சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் அவசர உதவிகளை வழங்கச் சென்ற ஐ,நாவின் உதவி வாகன தொடர்வண்டி, பொருட்களை முழுவதுமாக வழங்காமல் திரும்பி வந்துள்ளது.
முடிந்தவரை உதவிகளை விநியோகித்து ஒன்பது மணி நேரங்களுக்கு பிறகே அவ்விடத்தை விட்டுச் சென்றதாக ஐ.நா., அகதிகள் முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு சென்ற 40க்கும் அதிகமான டிரக்குகளில் 10டிரக்குகளின் பொருட்கள் கூட விநியோகிக்கப்படவில்லை என ஐ.நா., அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.