காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்துடன் சிற்றூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது சிற்றூர்தியில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமுற்ற பயணிகளை பிரதேச வாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், தற்போதைக்கு ஐந்துக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறை குழுவொன்று விரைந்துள்ளது.