இந்தியாவுடன் நடாத்த இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ஒத்திவைத்ததுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, இரண்டு நாடுகளும் பல்வேறு துறைகளிலும் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இந்த யூலை மாதம் 6ஆம் நாள் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தை நிகழ்வை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.