சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது 80ஆக அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை குறைக்க எண்ணியுள்ளதாகவும், இதேவேளை எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் வேட்பாளரை தாமும் ஆதரிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.