மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவீத வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, நாடாளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்றைய நாள் தேர்தல் நடாத்தப்பட்டதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் அவர் சார்ந்த ஐஆர்பி கட்சி தோல்வியை தளுவியுள்ளது.
அதேவேளை ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட “தேசிய ரீஜெனரேசன் இயக்கம்” தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில்,
53 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரண்டு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார்.
மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
ஊழல், வறுமை, போதை கும்பல்கள் ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என்று லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையையும் லோபஸ் ஆப்ரதோர் கடுமையாக வருகின்றபோதிலும், இவரது வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.