ரொரன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sherbourne street மற்றும் Dundas street பகுதியில், இன்று அதிகாலை 4.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்தச் சம்பவத்தின் போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக் குத்துக்கு இலக்கான நபர் தீவிசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.