பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரையில் 107 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்த போது, இது தொடர்பில் அவரிடம் தெரிவித்தாகவும் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமருடனும் எதிர்க்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.