இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.
சிங்கள மொழியிலுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், சனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை சனாதிபதி நீக்கவேண்டும் எனவும் அந்த அணி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.