நைஜீரியா நாட்டில் உள்ள கிராமம் ஒன்றை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் கணிசமாக வசிக்கும் மைலாரி எனும் கிராமப் குதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் அமைப்பு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு என்பன அங்கு தாக்குதல் சம்வங்களை நிகழ்த்தி வருவது வழமையாக உள்ள போதிலும், தற்போதைய இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.