எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் காவல்துறையினரின் சோதனைச்சாவடி மீது இன்று தாக்குதல் நடத்த முயன்ற நான்கு பயங்கரவாதிகளை காவல்துறையினர் சுட்டுக் கொனறுள்ளனர்.
எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் உள்ள மசூதியின் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணகானவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அதிபர் அப்ட்டெல்-ஃபட்டா அல்-சிசி உத்தரவிட்டார்.
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் இன்று காவல்துறை சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் முயன்ற வேளை, அதனை முறியடித்த காவல்துறையினர் ஆயுதங்களுடன் சென்றிருந்த நான்கு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.