வடகிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வவுனியா வாடி வீடு மண்டபத்தில் ஒன்றுகூடி தமது செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். அதன்படி எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40 வது கூட்டத் தொடரின் போதாவது தமது உறவுகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்குமுகமாக இம்மாதம் 30 ம் திகதி வவுனியா நகரில் நடத்தப்படவிருக்கும் மாபெரும் பேரணிக்கு அனைத்து மக்களையும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும்வ்ஒத்துழைப்பு தரவேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் திரு தேவராசா அவர்கள் கேட்டுக்கொண்டார்….