வடகொரியா அணுவாயுதங்களை பேணி வருகின்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அணுவாயுதங்கள் களைவு தொடர்பில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ள நிலையில், இவ்வாறான ஓர் அறிவிப்பினை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு வெளியிட்டுள்ளது.
இராணுவ தாக்குதல்களினால் தனது அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதனை உறுதி செய்யும் முனைப்புக்களில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணுவாயுதங்கள் முற்று முழுதாக களையப்பட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவை வலியுறுத்தி வருகின்றன.
எனினும், வடகொரியாவோ இந்த அணுவாயுதங்களை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.