அமெரிக்காவில் மீண்டும் அரசு பணி முடக்க நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் எல்லை பாதுகாப்பு தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
அமெரிக்க கொங்கிரஸ் சபை ஜனநாயக மற்றும் குடியரசு செனட்டர்கள் கொள்கை ரீதியில் எல்லை பாதுகாப்பு தொடர்பில் ஓர் இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் எல்லைச் சுவர் அமைக்க அமைப்பதற்காக அந்நாட்டு அரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்யுமாறு காங்கிரஸ் சபையிடம் கோரியிருந்தார்.
எனினும் நேற்றிரவு இணக்கம் காணப்பட்ட திட்டத்தில் எல்லையில் வேலி ஒன்றை அமைப்பதற்கு 1.375 பில்லியன் டொலர் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இணக்கப்பாடு தொடர்பில் கொங்கிரஸ் சபை இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி அந்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது .