ஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வர் கத்தலீன் வின்னின் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த காவல்துறை சேவை சட்டங்களை முழு அளவில் இரத்து செய்து புதிய திருத்தங்களை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1990ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பில் 175 சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் விசேட விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக ஃபோர்ட்டின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.