புது டில்லிக்கான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானசேவையை பாகிஸ்தான் சிவில் விமான சேவை ஆணையம் ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிலையங்கள் ராணுவத்துக்கு தேவைப்படுவதால் பாகிஸ்தான் முழுக்க வர்த்தக விமான சேவை ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் சிவில் விமான சேவை ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் நாடு முழுக்க உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சிவில் விமான ஆணையம் அறிவித்துள்ளது.
லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள எல்லா விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் விமான ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று காலையிலிருந்து காஷ்மீர் – பாகிஸ்தான் எல்லைகளில் கடும் பதற்றம் நிலவுவதால், இந்தியாவில் டெல்லிக்கு வடக்கில் உள்ள விமான நிலையங்களிலிருந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.