பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது சம்பளங்கள் போதுமானதல்ல என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அதிகளவான கனேடியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் திருப்தி அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென ஐம்பது வீதத்திற்கும் மேற்பட்ட கனேடிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ஸ்வைட்(Censuswide) இனால் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றிருந்த 13 வீதமானவர்கள் மட்டுமே தங்களது தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானது என திருப்தி வெளியிட்டுள்ளனர்.