கனடாவில் அடகுக் கடன் தொகைக்கான வட்டி வீதங்களில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அடகு வைத்தவர்கள் இந்த புதிய நடைமுறையின் ஊடாக பாரியளவில் நன்மை பெற்றுக்கொள்வார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் மூலமான நலன்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அடகுக்கான வட்டி வீத வீழ்ச்சியானது கனடாவின் பங்குச் சந்தை மற்றும் பிணை முறி சந்தை என்பனவற்றிலும் நேரடியாக தாக்கத்தை செலுத்தும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.