நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணைகளில் புலனாய்வுப் பிரிவினரை அழைப்பதை அனுமதிக்க முடியாது என அரசு தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று இரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அரசு தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, புலனாய்வுப் பிரிவினரை அழைப்பதையும், தகவல்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதையும் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அரச தலைவர் தெரிவித்துள்ளார்.