அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பிலான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திருத்தங்களின் பிரகாரம் சட்ட மா அதிபர், நீதிபதிகள், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் ஆகிய நியமங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.