இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் மீது இலங்கை கடற்படை வீர்ர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒருவர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தபோது இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர் ஜேசு (56) என்பவர் காயமடைந்தார். காயமடைந்த ஜேசுவை சக மீனவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.