• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Saturday, January 24, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இந்தியா

144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு

dineshpress by dineshpress
March 28, 2020
in இந்தியா, உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 24-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெறுவதில் தடை விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
எனவே மக்களின் நடவடிக்கைகள் முடங்கின. ஊரடங்கு உத்தரவினால் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் வீட் டில் இருந்தபடி அலுவலகப் பணியாற்றி வருகின்றனர்.
ஆனாலும் ஊரடங்கு உத்தரவை மீறி மிகச் சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்கும் இங்கும் செல்லத் தொடங்கினர். சென்னையில் முதல் நாளில் போக்குவரத்து போலீஸ் ஒருவர் கையெடுத்து வணங்கியும், கண் கலங்கியும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று சாலையில் பயணித்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கட்டுப்பாட்டில் இருந்து விலகி வீட்டை வெளியே தேவையில்லாமல் வருகிறவர் களைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் தோப்புக்கரணம் போடச் செய்வது உள்ளிட்ட நூதன தண்டனைகளையும் போலீசார் விதிக்கின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் கொரோனா நிவாரண உதவிகளையும், இலவச ரேஷன் பொருட்களையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மளிகைக் கடைகளை எந்த நேரத்திலும் திறக்கலாம் என்றும் கூட்டமாக கூடாமல் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 4-ம் நாளான நேற்று காலையில் ஆங்காங்கு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சில இடங்களில் மக்கள் கூடுவதாக புகார்களும் எழுந்தன. இந்தப் புகாரினால் வேலூரில் ஒரு காய்கறி சந்தையை வேலூர் மாநகராட்சி உடனே மூடியது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் ஊரடங்கு நிலை பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 27-ந் தேதி (நேற்று) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகள் குறித்தும், இது தொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார்.
அதற்கு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் பிரதமர், மக்கள் நலன் கருதி, 144 தடையுத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமரிடம் முதல்- அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Previous Post

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது

Next Post

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி
இந்தியா

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
Next Post

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In