வடக்கில் இந்துக்களின் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்துக்களின் பண்டிகை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு தீபம் ஏற்றிய முதியவர் ஒருவர் பரந்தனில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், சுன்னாகம் காவல்துறையினர் மிகவும் அராஜகமான முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.