வேல் யாத்திரையை மீண்டும் நான்காம் திகதி தொடங்கி, 7ஆம் திகதி திருச்செந்தூரில் நிறைவு செய்யவுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்க முடியாததால் வேல் யாத்திரையை இரத்துச் செய்ய வேண்டி ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழு மனதுடன் வரவேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்
சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.