புரவி புயலினால் நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வள்ளம் ஒன்றை மீட்க முயன்ற இளைஞன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 10 மணியளவில் சகோதரனுடன், வள்ளத்தை மீட்கச் சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான, 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்ற இளைஞன், வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன மீனவரை சிறிலங்கா கடற்படையினர், இராணுவத்தினர், மீனவர்கள் இணைந்து நந்திக்கடலில் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மீனவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, புரெவி புயலுடன் தொடர்புடைய அனர்த்தங்களால் வடக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.