விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை சோதனை நடத்தியுள்ளது.
ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்த்தாக கூறப்படுகிறது.
சீன விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் பதிலடி கொடுப்பதற்காக, கிழக்கு லடாக் எல்லை பகுதியில், இந்தியா இந்த ஏவுகணைகளை ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளது. அதேவேளை, ஆகாஷ் ஏவுகணையை அதிக செங்குத்து உயரத்திலுள்ள இலக்கை தாக்கும் வகையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், மேம்படுத்தி வருகிறது.





