குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
அங்கு 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 29 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்குவைத்தின் அமீர் புதிய பிரதமரை தேர்வு செய்வார்.
அந்த பிரதமரின் தலைமையில் அமைச்சரவை செயற்படத் தொடங்கும் என்றும் தற்போதுள்ள அரசு தேர்தலுக்கு பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்யும் எனவும் கூறப்படுகின்றது,