வவுனியாவில் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்ற போது, காணாமல்போன மாணவன், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் தி.தனுசன் என்ற மாணவனே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்றிருந்த போது, மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தேடுதலின் பின்னரே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.