அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக ரவிநாத ஆரியசிங்க பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த முதலாம் திகதி அமெரிக்காவைச் சென்றடைந்த ரவிநாத ஆரியசிங்க, தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.
கொரோனா சூழலில், அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்து, தூதுவர்கள் நியமனச் சான்றிதழ்களை கையளிக்கும் நிகழ்வுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரவிநாத ஆரியசிங்க கடந்த வெள்ளிக்கிழமை தனது நியமனச் சான்றிதழ்களின் பிரதியை இராஜாங்கத் திணைக்களத்தில் கையளித்துள்ளார்.
இதன் மூலம் அவர் சிறிலங்கா தூதரகத்தின் தலைவராக செயற்படும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.