உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நாளை செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவிக்கவுள்ளது.
இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 1954 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த சிகரத்தின் உயரம் 8848 மீற்றர் என்றும் அதாவது 29 ஆயிரத்து 26 அடி என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதோடு அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு அறிவிக்கவுள்ளது.