நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன. எனவே வளா்ச்சிக்கு சீா்திருத்தம் அவசியமாகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த நூற்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அப்போது சிறந்தவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்துக்கு அவை சுமையாக மாறியுள்ளன. எனவே நாட்டின் வளா்ச்சிக்கு சீா்திருத்தங்கள் அவசியம். அத்தகைய சீா்திருத்தங்களை முழுமையான அளவில் மேற்கொள்வதில்தான் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்