இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
குறிப்பாக சென்னையில சைதாப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதேநேரம் சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.