சிறிலங்காவில், பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சிசு உயிரிழந்துள்ளது.
இதேவேளை இன்று மட்டும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 567 பேர் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய 230 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்து 29 ஆயிரத்து 378ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் ஏழாயிரத்து 978 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 142 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.