எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்ற சீனாவின் செயல்தான் மோதலுக்கு காரணம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
“சீனா, எல்லை கோட்டின் தன்மையை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. அதுதான் கடந்த 6 மாதங்களாக அங்குள்ள நிலைமைக்கு காரணம். இது, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறிய செயல் ஆகும்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு உருவாகும் என்றும், படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.” என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.