சிறிலங்காவில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மட்டும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் எட்டாயிரத்து 679 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.