உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் 2, ஆயிரத்து 658 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, உலகில் ஊடகத்துறையினருக்கு அதிக ஆபத்துள்ள நாடுகளின் வரிசையை பட்டியலிட்டு உள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் அதிகம் இடம்பெற்ற நாடுகளின் வரிசையில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது.
அங்கு 340 ஊடகவியலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மெக்சிகோவில் 178 பேரும்,, பிலிப்பைன்சில் 178 பேரும், பாகிஸ்தானில், 138 பேரும், கொல்லப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டில் குண்டு வெடிப்புகள், எல்லை கடந்த தாக்குதல் சம்பவங்கள், குறிவைத்து தாக்குதல் ஆகியவற்றில் 15 நாடுகளை சேர்ந்த 42 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றில் மெக்சிகோவில் 13 பேரும், அதனை தொடர்ந்து பாகிஸ்தானில் 5 பேரும் பிலிப்பைன்ஸ், சோமாலியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தலா 2 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.