யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இவர்களில் யாழ்.மாவட்டத்தின் பல இடங்களைச் சேர்ந்த 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொக்குவில்,சங்கானை, பண்டத்தரிப்பு, கைதடி,, சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏழாலை, அளவெட்டி,கீரிமலை, மானிப்பாய், உடுவில், இணுவில், சுன்னாகம், ஆகிய பகுதிகளில் தலா இரண்டு தொற்றாளர்களும் தெல்லிப்பழையில் மூன்று தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.