கொரோனா வைரஸ் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 119பேர் பாதிக்கப்பட்டதோடு, 122பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை நான்கு இலட்சத்து 68ஆயிரத்து 862பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13ஆயிரத்து 553பேர் உயிரிழந்துள்ளனர்.
75ஆயிரத்து 842பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 596பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.