கனடாவில் கொரோனா தடுப்பூசி சில நபர்களுக்கு இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதும் கனடிய சுகாதாரத்துறையினர் அதனை வீ-டே என்று பெயரிட்டுள்ளனர்.
இதேவேளை, பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசி மிக நெருக்கடியில் இருந்த சிலருக்கே செலுத்தப்பட்டள்ளது.
இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு மற்றொரு அத்தியாயத்திற்குள் பிரவேசிப்பதாக சுகாதரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.