ஆசிரியர்களுக்கு கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாத் தொற்றுக் காரணமாக உலகெங்கிலுமுள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்களுக்கு முதலில் தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யலாம்.
மேலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.