இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி குறிப்பிடும் அமெரிக்காவின் பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும் நிறைவேற்றியுள்ளன.
இந்த சட்டமூலத்தில், லடாக் எல்லையில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க காங்கிரஸ் சார்ந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் தீர்மானமும் அடங்கி உள்ளது.
இந்தச் சட்டத்தில் கையொப்பமிடுவதன் மூலம் சீனாவின் இந்தியா மீதான இராணுவ ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியை அமெரிக்க அரசு அனுப்பும் என கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.