தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
‘புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும்’ எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், இணைய வழி மூலமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை உரை அற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கள் யாவும் தமிழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை
அவை சிங்கள அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
அதுமட்டுமன்றி சிங்களத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் கூட உள்வாங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.