நைஜீரியாவின் வடக்கு பகுதியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் ஆண்கள் பாடசாலை ஒன்றின் மீது கடந்தவாரம் தாக்குதல் நடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள், 450-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றிருந்தனர்.
கடத்தி செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நைஜீரிய இராணுவத்தினர், காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து, 344 மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும், சில மாணவர்களை பயங்கரவாதிகள் தங்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.